சேலம்: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் 4 பேர் சரண்

சேலம்: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் 4 பேர் சரண்
X

சேலத்தில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தவர்கள்.

சேலத்தில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், இளைஞர்கள் 4 பேர் சரண் அடைந்தனர்.

இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு சிறையில், பாஜக பிரமுகர் கல்யாணராமன் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது, சேலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அவருக்கு எதிராக அரசு மருத்துவமனை வளாகத்தில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ப இளைஞர்கள் சிராஜூதின், அப்பாஸ் உள்ளிட்ட 4 பேர் சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தனர். பின்னர், அனைவரும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி