ராஜகணபதி கோயில் உண்டியலில் 10.58 லட்சம் காணிக்கை

சேலத்தில் ராஜகணபதி கோயில் உண்டியலில் ரூ. 10.58 லட்சம் காணிக்கை வசூலானது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தேர்மண்டி பகுதியிலும், காசி விஸ்வநாதர் கோயில் 2 வது அக்ரஹாரத்திலும் உள்ளது. இந்த இரு கோயில்களின் உண்டியல்களும் கடந்த சில நாட்களுக்கு முன் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ண அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த உண்டியல் காணிக்கைகள் சேலம் சுகவனேஸ்வரர் கோயில் மண்டபத்தில் திறந்து எண்ணப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை சேலம் உதவி ஆணையர் உமாதேவி, இன்ஸ்பெக்டர் மணிமாலா, சுகவனேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்படி, சேலம் ராஜகணபதி கோயிலில் 4 உண்டியல்கள் உள்ளது. இந்த உண்டியல்களில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 176 ம், தங்கம் 8 கிராம் 100 மில்லிகிராமும், வெள்ளி 245 கிராம் இருந்தது. 2 வது அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர் கோயிலில் 2 உண்டியல்கள் மூலம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 970 ம், தங்கம் 5 கிராம் 100 மில்லிகிராம், வெள்ளி 45 கிராம் இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu