/* */

பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி போராட்டம்

சேலம் மாநகராட்சி பகுதி பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டம்

HIGHLIGHTS

பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி போராட்டம்
X

பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இதுவரை முடிவடையவில்லை. ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சேலம் திருச்சி பிரதான சாலையில் தாதகாப்பட்டி பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், அந்த சாலையில் உள்ள பொதுமக்கள் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்வதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

பொது மக்களின் பிரச்சனையை கருத்தில் கொண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவில் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

Updated On: 8 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  5. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  7. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்