/* */

குப்பைக்கு சென்ற மலர்கள்

சேலம் வ.உ.சி பூ மார்க்கெட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.

HIGHLIGHTS

குப்பைக்கு சென்ற மலர்கள்
X

வ.உ.சி பூ மார்க்கெட்டில் பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.

சேலம் வ.உ.சி பூ மார்க்கெட்டில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மார்க்கெட் முழுவதுமாக மூடப்பட்டது. இதனால் மார்க்கெட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் வ.உ.சி பூங்கா செயல்பட்டுவருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த மார்க்கெட்டில் கடை வைத்துள்ள 4 பேருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றைய தினம் மார்க்கெட் வளாகத்தில் கொரோனா சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மார்க்கெட்டில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்பை கருதி இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை வஉசி பூ மார்க்கெட்டை மூடி நோய்தடுப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பூ மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் மார்க்கெட்டில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.

Updated On: 6 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...