புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் முன்பு பக்தர்கள் வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் முன்பு பக்தர்கள் வழிபாடு
X

சேலத்தில் உள்ள பெருமாள் கோவில் முன்பாக நின்று தரிசனம் செய்த பக்தர்கள்.

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சேலத்தில் உள்ள பெருமாள் கோயில்கள் முன்பாக நின்று பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அனைத்து வைணவத் தலங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த நாட்களில், சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் உள்ளிட்ட வைணவக் கோவில்களில், காலை முதற்கொண்டே ஆயிரக்கணக்கான பக்கதர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

எனினும், தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வெள்ளி முதல் ஞாயிறுக்கிழமை வரை, வழிபாட்டுதலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது. இதனால், எந்த கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று, கோயில்களுக்கு செல்ல முடியாத பக்தர்கள் பலரும், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில், பட்டைக்கோயில் எனப்படும் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில், வாயில் முன்பாக நின்றபடியே வழிபட்டு சென்றனர். அதே நேரம், கோயில்களில் பக்தர்களின்றி வழக்கம்போல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
why is ai important to the future