/* */

கொரோனோ விதிமீறல்: அரசு, தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிப்பு

கொரோனோ நோய்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு, சேலம் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

கொரோனோ விதிமீறல்: அரசு, தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிப்பு
X

தமிழகத்தில் கொரோனோ இரண்டாவது அலை வேகமாக பரவி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 20 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளை கொண்டு அமர்ந்து செல்லும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் உள்ளார்களா என, சேலம் அம்மாபேட்டை பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனரை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்ததுடன் அதிக பயணிகளை ஏற்றி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு, 500 ரூபாய் முதல் 5000 வரை அபராதம் விதித்தனர். இன்று காலை முதல் நடத்தப்பட்ட சோதனையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Updated On: 22 April 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.