/* */

சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் : முன்னாள் முதல்வர் மீது வழக்கு

சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் : முன்னாள் முதல்வர் மீது வழக்கு
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 

சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக குற்றம்சாட்டி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 23 ஆவது வார்டுக்கு உட்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 90 பேர் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனுமதியன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது; நோய்த்தொற்று பரவும் நடவடிக்கையாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 29 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...