/* */

பெண் கொலை - 4 தனிப்படை அமைத்து விசாரணை

பெண் கொலை - 4 தனிப்படை அமைத்து விசாரணை
X

இஸ்லாமிய பெண்கள் சேவை அமைப்பின் செயலர் கொலை வழக்கில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சேலம், அம்மாபேட்டை பாலாஜி நகரை சேர்ந்தவர் பாட்ஷா (48). சேலம், முகம்மது புறாவில் உள்ள மஜித்தில், மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி உமைபானு (45). இவர் கடந்த 2008 முதல், சேலம் மாவட்ட இஸ்லாமிய பெண்கள் சேவை அமைப்பின் செயலராகவும், மகளிர் சுய உதவிக்குழு தலைவியாகவும் இருந்தார். நேற்று முன்தினம், பாட்ஷா வேலைக்கு சென்றார். மாலை 4.30 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த உமைபானுவின், கை, கால்களை கட்டிப்போட்டு, மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, கதவுகள் திறந்து கிடந்ததால், சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது, உமைபானு இறந்து கிடந்ததோடு, பீரோவில் உள்ள பொருட்களும் சிதறிக்கிடந்தன.

இது குறித்து, அளிக்கப்பட்ட புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, உதவி கமிஷனர் அனந்தகுமார், இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து, கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டார். கொலை குறித்து பல்வேறு கோணங்களில், தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 15 March 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...