/* */

டிச. 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டம்

டிச. 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டம்
X

வரும் 27ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டம் தொடங்க உள்ள நிலையில் 26ம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கத்தலைவர் ராஜவடிவேல் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறும் போது, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ள காலவரையறையற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வரும் 26 ஆம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தப்படுவதாகவும், இதன்மூலம் உணவு தானிய பொருட்கள் கட்டுமானப் பொருட்கள் ஆகியவை புக்கிங் செய்யப்படமாட்டாது என்று தெரிவித்தார். இதன்மூலம், தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூபாய் பத்தாயிரம் கோடி பொருட்கள் தேக்கமடையும் என்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே கொரோனா தொற்று பரவல் காரணமாக லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் நடவடிக்கையால் லாரி உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜ வடிவேல் கோரிக்கை விடுத்தார். மேலும் டீசல் விலையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Updated On: 22 Dec 2020 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!