/* */

கானா பாடலுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி கைது

கானா பாடலுடன் பிறந்தநாள் கொண்டாடிய  பிரபல  ரவுடி கைது
X

சேலத்தில் கானா பாடலுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

சேலம் சின்னக்கொல்லப்பட்டியை சேர்ந்தவர் அசாருதீன். ரவுடியான இவர் மீது பலாத்காரம், வழிப்பறி உள்பட 5 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ரவுடி அசாருதீனை புகழ்ந்து கானா பாடல் ஒன்று வைரலாக பரவியது. அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அசாருதீனை பாராட்டி இளைஞர் ஒருவர் கானா பாடல் பாடுகிறார். அந்த பாடலின் கடைசி வரியில் "அசார் அண்ணன தொட்டா தலய வெட்டி கையில பிடிச்சுக்குவோம்" என வரிகள் வருகிறது.அதே போல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெரிய கேக்கை வெட்டி ரவுடி அசாருதீன் கொண்டாடும் காட்சியும் வெளியாகியுள்ளது .

இதுகுறித்த தகவல் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. பாடலில் கொலை செய்வேன் என வெளிப்படையாக அச்சுறுத்தும் அக்கும்பலை கூண்டோடு பிடிக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசாரின் பிடியில் ரவுடி அசாருதீன் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தேடுவதை அறிந்து கொண்ட கானா பாட்டு பாடிய இளைஞர் சென்னைக்கு தப்பி ஓடிவிட்டார். அவருடன் இருந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 10 March 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்