/* */

திருமணமாகாத விரக்தியில் மாரியம்மன் கோவில் சிலைகளை உடைத்த இளைஞர் கைது

சேலம் அருகே திருமணமாகாத விரக்தியில் மாரியம்மன் கோவிலில் இருந்த 5 சாமி சிலைகளை உடைத்த இளைஞர் கைது.

HIGHLIGHTS

திருமணமாகாத விரக்தியில் மாரியம்மன் கோவில் சிலைகளை உடைத்த இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட சதீஷ்.

சேலம் கன்னங்குறிச்சி ஆத்துக்காடு பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு இன்று பொதுமக்கள் வழிபாடு நடத்த சென்றபோது கோவில் வளாகத்தின் முன்பகுதியில் உள்ள நவக்கிரக சிலைகள் கேது, சூரியன், புதன் உள்ளிட்ட ஐந்து சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் தகவலின் பேரில் விரைந்து வந்த உதவி ஆணையாளர் ஆனந்த்குமார் தலைமையிலான காவல்துறையினர் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வேம்படிதாளம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் சிலையை உடைத்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தாயை இழந்து சித்தி வீட்டில் தங்கியிருக்கும் சதீஷ் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, திருமணமாகாத விரக்தியில் சாமி சிலைகளை உடைத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

Updated On: 20 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...