/* */

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 48 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்
X

சேலம் மாநகராட்சி சிறப்பு முகாம் (பைல் படம்).

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை அண்ணா நகர், மெய்யனூர் அர்த்தனாரி கவுண்டர் தெரு, சொட்டையன் தெரு, பெருமாள் கோவில் தெரு, மோளப்பட்டியான் வட்டம், சின்னக்கொல்லப்பட்டி சட்டக்கல்லூரி இந்திரா நகர் 9வது கிராஸ், அண்ணா பூங்கா பின்புறம் சங்கர் நகர், சோமு தெரு, பாலமுருகன் தெரு, ஜாமியா மஜித், பாரதியார் தெரு, நந்தனார் தெரு,ராமலிங்கம் மாதர் தெரு, எஸ்.ஆர்.எம். நகர், வள்ளுவர் நகர், மேட்டு தெரு ஆகிய பகுதிகளிலும், பிற்பகல் 12 முதல் 2 மணி வரை அழகாபுரம் ஆண்டாள் தெரு திருமால் நகர், ஆசாத் நகர், அம்மன் நகர், ஜவஹர் மில் பின்புறம், பி.ஆர்.பி.நகர்,குருக்கள் காலனி சிவநாயக அப்பார்ட்மெண்ட் அருகில், மாரியம்மன் கோவில் தெரு சீரங்கபாளையம், சாய்பாபா தெரு, அண்ணா நகர் 4வது கிராஸ், சத்தியமூர்த்தி நகர், சித்தி விநாயகர் தெரு, ஆறுமுகம் நகர், அம்பலவாண சுவாமி கோவில் தெரு, கெட்டுக்காடு, கருங்கல்பட்டி 4வது கிராஸ், பெருமாள் கோவில் மேடு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3 மணி முதல் 5 மணி வரை எட்டிக்குட்டை தெரு, லட்சுமி நகர், டி.எம்.ரோடு, முல்லாக்காடு, வீரபாண்டியார் நகர், மணக்காடு, கோவிந்தக்கவுண்டர் தோட்டம், குண்டு போடும் தெரு, தில்லை நகர், ராஜா பிள்ளை லைன், கிருஷ்ணா புதூர் பண்டிரநாதர் தெரு, அண்ணா நகர் மற்றும் அழகு நகர், மார்க்கெட் தெரு, கொண்டலாம்பட்டி நடுத்தெரு, சபாபதி காடு களரம்பட்டி மெயின்ரோடு, சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.


Updated On: 14 Aug 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  2. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  3. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  4. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  5. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  6. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  7. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  8. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்