/* */

சேலத்தில் இருதரப்பு மோதல் - காவல்நிலையம் முற்றுகை

சேலத்தில், இருதரப்பு மோதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இருதரப்பினர், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

சேலத்தில் இருதரப்பு மோதல் - காவல்நிலையம் முற்றுகை
X

சேலத்தில், திருநங்கைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக உரிய விசாரணை நடவடிக்கை எடுக்கக்கோரி,  இருதரப்பினர் பள்ளப்பட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சேலம் மாநகர பகுதிகளில், 150 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இரு பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இந்த இரு பிரிவினருக்குமிடையே அவ்வப்போது பிரச்னை எழுவதுண்டு. இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கடை தொடர்பாக, திருநங்கைகள் சிலரிடையே பிரச்னை எழுந்துள்ளது.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில், கலைவாணி மற்றும் மித்ரா ஆகிய இருவரை, மூன்று திருநங்கைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக சேலம். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், மூன்று திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த தகவலறிந்த இருதரப்பை சேர்ந்த சக திருநங்கைகள், பள்ளப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி இருதரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 14 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு