/* */

கொரோனா ஊக்கத்தொகை வழங்க கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வலியுறுத்தி கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கொரோனா ஊக்கத்தொகை வழங்க கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள்.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் கிராம வங்கி ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கங்களுக்கான சந்தாவை இதுவரை வங்கி நிர்வாகம் சம்பள பணத்திலிருந்து பிடித்தம் செய்து சங்கங்களுக்கு வழங்கியது. தற்போது அது நடைமுறைப்படுத்தவில்லை. இதற்காக நீதிமன்ற உத்தரவு இருந்தும் சந்தா தொகையை வழங்காமல் வங்கி நிர்வாகம் செயல்படுகிறது என்றும், பழைய நடைமுறையில் சந்தா தொகையை வங்கி நிர்வகமே வசூலித்து சங்கங்களுக்கு தரவேண்டும்.கொரோனா கால ஊரடங்கு காலத்தில் தனது சொந்த செலவில் வங்கி பணியாற்றிய கிராம வங்கி ஊழியர்களுக்கு வங்கி நிர்வாகம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் வங்கி நிர்வாகம் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Updated On: 21 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’