/* */

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினருடன் போலீசார் வாக்குவாதம்

சேலத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்த செல்ல முயன்ற இந்து முன்னணியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினருடன் போலீசார் வாக்குவாதம்
X

சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தும் போலீசார்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் சேலம் எல்லை பிடாரி அம்மன் கோவில் பகுதியில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்து முன்னணியினர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல முயற்சித்தனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பொது இடத்தில் வைக்கவும், ஊர்வலத்திற்கும் அனுமதி இல்லை என்று கூறியதால் இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்து முன்னணி சேலம் மண்டல தலைவர் சந்தோஷ்குமார் சிலையை தனது கடைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியதால், ஒரு நபரை மட்டும் அனுமதித்தனர். இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Updated On: 10 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி