/* */

மருத்துவமனைகளில் தொடரும் தீ விபத்து: சேலத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்தம்

வட மாநிலங்களில் தீ விபத்தால் நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மருத்துவமனைகளில் தொடரும் தீ விபத்து: சேலத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்தம்
X

நாடு முழுவதும் கொரோனா 2 ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் வட மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, வட மாநிலங்களில் சில மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டு, அதன் காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வரும் சோக நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீ தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என தீயணைப்பு துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதையடுத்து, கொரோனா நோயாளிகள் அதிகமாக உள்ள மருத்துவமனைகளில் தீயணைப்பு வாகனங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில், சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் மருத்துவமனையின் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 May 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...