/* */

பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில், இருசக்கர வாகனம் மற்றும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி, தேமுதிகவினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து,  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் சமையல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளின் விலை உயர்வை கண்டித்து, பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தேமுதிக சார்பில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக மாநில கொள்கை பரப்புச்செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தியும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும், சாமானியர்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 5 July 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி