/* */

சேலத்தில் வீட்டில் பதுக்கிய 2174 மதுபாட்டில்கள் பறிமுதல்

சேலத்தில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 2174 மதுபாட்டில்கள், நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சேலத்தில் வீட்டில் பதுக்கிய 2174 மதுபாட்டில்கள் பறிமுதல்
X

சேலம் பள்ளப்பட்டி பெரமனூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவர் வீட்டில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்று வருவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பள்ளப்பட்டி போலீஸார் மாதேஷின் வீட்டிற்கு சென்று இரவு சோதனையிட்டனர்.

இதில் அவரது வீட்டில் 2174 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாதேஷ் மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சேலம் 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில், நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் மதுபாட்டில்கள் அனைத்தும் அழிக்கும் பணி நடைபெற்றது. நீதிமன்ற வளாகத்தில் குழி வெட்டப்பட்டு, அனைத்து மது பாட்டில்களும் திறந்து அந்த குழியில் மதுவை ஊற்றி காவல்துறையினர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அழித்தனர்.

Updated On: 11 May 2021 8:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்