/* */

சேலத்தில் 1591 நியாயவிலை கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி

முதல் தவணை கொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்

HIGHLIGHTS

சேலத்தில் 1591 நியாயவிலை கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக முதல் தவணையாக 2000 வழங்கும் பணி துவங்கியது.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 12 ஆயிரத்து 249 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை 2 ஆயிரம் நிவாரண தொகை இன்று முதல் வழங்கும் பணி துவங்கியது.

இதனை சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் துவக்கி வைத்தார். முதல் தவணை 2 ஆயிரம் ரூபாய் 1591 நியாயவிலைக் கடைகள் மூலமாக 202 கோடியில் 44 லட்சத்து 98 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. நியாய விலைக் கடைகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று முதல் தவணை கொரோனா நிவாரண நிதியை பெற்று செல்கின்றனர்.

ஒரு நாளைக்கு ஒரு நியாய விலை கடைகளுக்கு 200 டோக்கன் வழங்கப்பட்டு நிவாரண நிதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 15 May 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  7. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  8. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  9. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  10. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...