/* */

கொரோனோ தடுப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா? பள்ளியில் கலெக்டர் ஆய்வு

கொரோனோ நோய்த்தொற்று தடுப்பு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

HIGHLIGHTS

கொரோனோ தடுப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா? பள்ளியில் கலெக்டர் ஆய்வு
X

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளதையொட்டி, சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசு அறிவித்துள்ள கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகள் முழுமையாக பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகின்றதா என்பதை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வில் பள்ளியின் வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம் சரியான முறையில் நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளனவா என்பதை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உடனிருந்தார்.

Updated On: 1 Sep 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!