/* */

சேலத்தில் கொரோனா நோயாளிகள் பகுப்பாய்வு மையம்- கலெக்டர் தகவல்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில், கொரோனா நோயாளிகளுக்கான க்கு பகுப்பாய்வு மையம் ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும், கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலத்தில் கொரோனா நோயாளிகள் பகுப்பாய்வு மையம்- கலெக்டர் தகவல்
X

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில்,  கொரோனா சிகிச்சை வழிகாட்டும் மையத்தில், தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

சேலத்தில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காத அளவுக்கு, நிரம்பி வழிகின்றன.
அண்மையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வழிகாட்டும் மையத்தில் நோயாளிகள் தரையில் படுக்க வைத்து, ஆக்சிஜனுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கேட்டபோது, இந்த புகார் தொடர்பாக மருத்துவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வழிகாட்டு மையத்தின் அருகே, நோயாளிகளின் உடல்நிலை குறித்து பகுப்பாய்வு செய்வதற்கான 30 ஆக்சிஜன் கூடிய படுக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது, ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

சேலத்தில், பகுப்பாய்வு மையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், நோயாளிகளின் உடல்நிலை பரிசோதித்து, உடனுக்குடன் ஆக்சிஜன் வழங்கி சிகிச்சை அளிக்கப்படும் என்று சேலம் கலெக்டர் தெரிவித்தார்.

Updated On: 2 Jun 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  8. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  9. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  10. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...