/* */

உடைந்த குடிநீர் குழாய்: ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பாதாள சாக்கடைத் திட்டப்பணியின் போது உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி ஒப்பந்ததாரரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

உடைந்த குடிநீர் குழாய்: ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
X

சேலம் அணைமேடு பகுதியில் ஒப்பந்ததாரை முற்றுகையிட்ட பொதுமக்கள். 

சேலம் மாநகராட்சி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேலம் அணைமேடு பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளுக்காக குழி தோண்டிய போது குடிநீர் குழாய் உடைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யாமல் பணியாளர்கள் குழியை மூட முயன்றதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் குழாய் உடைக்கப்பட்டது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தபோது, சேதமடைத்த குழாய்களை ஒப்பந்ததாரர் வாங்கி கொடுத்தால் சீரமைத்து தருவதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்காமல் பணிகளை தொடங்க விடமாட்டோம் என்று ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

Updated On: 30 Aug 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி