/* */

நகர்நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.

HIGHLIGHTS

நகர்நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
X

சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலராக மருத்துவர் பார்த்திபன் தற்போது பணியாற்றிவருகிறார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் இவர் ஆங்காங்கே கொரோனா சிகிச்சை முகாம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு இல்லத்தில் குடியிருக்கும் அவரது வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டிலுள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதோடு உடனடியாக விசாரணையை துவக்கியுள்ளனர். மருத்துவர் பார்த்திபன் மதுரையில் பணியாற்றியபோது மருந்து கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக ஏற்கனவே இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்த விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். மதுரையை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரும் சேலத்தைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரும் தற்போது விசாரணையில் ஈடுபட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 16 April 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?