/* */

அரசு அதிகாரியை மிரட்டியவர் 5 ஆண்டுகளுக்கு பின் கைது

அரசு அதிகாரியை மிரட்டியவர் 5 ஆண்டுகளுக்கு பின் கைது
X

சேலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் அதிகாரியை மிரட்டிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார். இவர் மீது சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடு, பண இரட்டிப்பு மோசடி தொடர்பாக அவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். கடந்த ஓராண்டிற்கு முன் சிவக்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.இதனிடையே சிவக்குமார் மீது சேலம் டவுன் போலீசில் கடந்த 2015 ம் ஆண்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கொடுத்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவக்குமாரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதன் பேரில் , சிவக்குமாரை சேலம் டவுன் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். நேற்று மாலை அவரை போலீசார் கைது செய்தனர். 5 ஆண்டுக்கு பின் அதிகாரியை மிரட்டிய வழக்கில் அவரை கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து சிவக்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன் முடிவு வந்தவுடன் சிறையில் அடைக்கவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 3 March 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!