/* */

சேலத்தில் கனமழை காரணமாக வாகன நிறுத்துமிடத்தில் நான்கு கார்கள் மழைநீரில் மூழ்கின

சேலத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக தனியார் தங்கும் விடுதி வாகன நிறுத்துமிடத்தில் நான்கு கார்கள் மழைநீரில் மூழ்கின.

HIGHLIGHTS

சேலத்தில் கனமழை காரணமாக வாகன நிறுத்துமிடத்தில் நான்கு கார்கள் மழைநீரில் மூழ்கின
X

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியின் வாகன நிறுத்துமிடத்தில் மழை நீரில் மூழ்கிய நான்கு கார்கள்.

சேலம் மாவட்ட அளவில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஆணைமடுவு மற்றும், சேலம் மாநகர பகுதிகளில். சுமார் 10 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. சேலம் மாநகர பகுதிகளில் மூன்று மணி நேரத்துக்கு மேலாக கன மழை வெளுத்து வாங்கியது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் ஓடியது.

குறிப்பாக புதிய பேருந்து நிலையம் எதிரே அத்வைத ஆஷ்ரம சாலை வெள்ளக்காடாக மாறியது. அதிகாலை நேரத்தில் சாலையில் வெள்ளம் வடிந்த நிலையில் தங்குவிடுதி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்கள் முழுமையாக நீரில் மூழ்கின. இதன் காரணமாக காரின் உரிமையாளர்கள் அவதிக்குள்ளாயினர். இதனையடுத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் வடிக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 5 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...