/* */

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி
X

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை சேலம் கலெக்டர் ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்று இணைப்பு சக்கரங்கள் பொருத்திய வாகனத்தில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, சேலம் மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி மாநகரின் பிரதான சாலைகள் வழியே சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.

Updated On: 13 March 2021 5:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  3. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  6. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  7. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  9. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...