பாதாள சாக்கடை தூய்மை பணிக்கு ரோபோக்களை பயன்படுத்த கோரிக்கை

சேலம் மாநகராட்சி தினக்கூலி தூய்மைப் பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் மாநில ஆதிதிராவிட நல குழு உறுப்பினர் செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தினக்கூலி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் செல்வகுமார், தமிழகம் முழுவதும் பணியாற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் பாதாள சாக்கடையில் இறங்கி மனிதர்கள் பணியாற்றுவதற்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இதுமட்டுமில்லாமல் கொரோனா காலங்களில் பணியாற்றி உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பங்களை கௌரவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu