/* */

இடஒதுக்கீடு கோரி பாமக ஆர்ப்பாட்டம்

இடஒதுக்கீடு கோரி பாமக ஆர்ப்பாட்டம்
X

வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஆயிரகணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமக மற்றும் வன்னியர் சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் ஐந்து கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் ஆறாவது கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்றைய தினம் பாமக சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. பாமக மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகர், ஓமலூர், எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கோஷங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பாமகவின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 29 Jan 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!