/* */

நடைபாதை குப்பை சேகரிக்கும் பணி மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

நடைபாதை குப்பை சேகரிக்கும் பணி மாநகராட்சி  ஆணையாளர் பங்கேற்பு
X

சேலம் காரிமேட்டில் நடைபாதை குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்றது. இதில் மாநகராட்சி மற்றும் மாநகர காவல் ஆணையாளர்கள் பங்கேற்றனர்.

சேலத்தை தூய்மையான மாநகரமாக மாற்ற மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நடை பயிற்சியின்போது நடைபாதை குப்பைகளை அகற்றும் பணி வார விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணி குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை சார்பில் கோரிமேடு முதல் செட்டிசாவடி வரை நடைபாதை குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது.

இதில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், துணை ஆணையர்கள் செந்தில், சந்திரசேகர் மற்றும் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட காவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நடைபாதை குப்பைகளை அகற்றினர்.சேலம் பிளாகிங் பணியில் இளைஞர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தங்கள் பகுதியை சுகாதாரமான தூய்மையான பகுதியாக திகழச்செய்ய முன்வர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 27 Dec 2020 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...