/* */

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த திருநங்கைகள்

சேலம் மாநகராட்சி தேர்தலில் நீண்ட வரிசையில் காத்திருந்து திருநங்கைகள் வாக்களித்தனர்.

HIGHLIGHTS

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த திருநங்கைகள்
X

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த திருநங்கைகள்.

சேலம் மாநகராட்சி தேர்தல் அமைதியான முறையில் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. 18வது கோட்டத்திற்குட்பட்ட தொகுதியில் தேமுதிக சார்பில் திருநங்கை ராதிகா என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து திருநங்கைகள் கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 18 ஆவது கோட்டத்திற்குட்பட்ட மெய்யனூர் அரசு பள்ளியில் நடைபெற்று வரும் தேர்தலில் வாக்குப் பதிவு செய்ய அந்த பகுதியை சேர்ந்த திருநங்கைகள் ஒன்று திரண்டு வந்து வாக்களித்தனர்.

மேலும் திருநங்கைகளுக்கு வாக்குரிமை வழங்கி அதனை நிறைவேற்றிய அரசுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். தங்கள் சமுதாயத்தின் சார்பில் போட்டியிடும் திருநங்கையை வெற்றி பெறச் செய்வதே தங்களின் நோக்கம் என்றும் அதற்காக பல்வேறு கட்டங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் நிச்சயம் அவர் 18வது கோடத்தில் வெற்றி பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Updated On: 19 Feb 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்