சேலத்தில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி: 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சேலம் ஒய்.எம்.சி.ஏ விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 28 ஆவது ஓப்பன் டேபிள் டென்னிஸ் போட்டி.
சேலம் ஒய்.எம்.சி.ஏ மற்றும் ரவுண்ட் டேபிள் 28 சார்பில் 28 ஆவது ஓப்பன் டேபிள் டென்னிஸ் போட்டி ஒய்.எம்.சி.ஏ விளையாட்டு அரங்கில் இன்று துவங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை திறன்பட வெளிப்படுத்தினர்.
வயது அடிப்படையில் 17 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை மாலை நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் சேலம் மாவட்ட டேபிள் டென்னிஸ் அசோசிஷன் நிர்வாகிகள் பரிசுகளை வழங்க உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu