/* */

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி: சேலம் அணி சாதனை

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் சேலம் அணி முதல் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி: சேலம் அணி  சாதனை
X

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து தடகள வீரர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டி கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 600 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.இதில் சேலம் மாவட்டத்திலிருந்து 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் பிரிவில் சேலம் அணி முதலிடத்தையும், சீனியர் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. சப் ஜூனியர், ஜூனியர் பிரிவில் 33 தங்கம், 14 வெள்ளி, 4 வெண்கலம் என 51 பதக்கங்களையும், சீனியர் பிரிவில் 10 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 25 பதக்கங்களையும் பெற்று சாதனை பெற்றுள்ளது.

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து தடகள வீரர்களுக்கும் பாராட்டு விழா சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் தலைவர் முருகானந்தம் மற்றும் செயலாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

Updated On: 12 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்