/* */

சேலம் அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு: நோயாளியின் உறவினர்கள் ஆத்திரம்

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்கள் தீவிர சிகிச்சை பிரிவின் நுழைவு வாயில் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

சேலம் அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு: நோயாளியின் உறவினர்கள் ஆத்திரம்
X

தீவிர சிகிச்சை பிரிவின் நுழைவு வாயிலில் உடைக்கப்பட்ட கண்ணாடி.

ஈரோடு மாவட்டம் சீரங்கபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார். மீன்பிடி தொழிலாளியான இவர் கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது அதிவேகமாக வந்த ஆட்டோ மோதியதில் முதுகு தண்டுவட பகுதியில் பலத்த காயமடைந்து ஈரோடு அரசு மருத்துமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குமாருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து உரிய சிகிச்சை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த குமாரின் மருமகன் பூபதி அவசர சிகிச்சை பிரிவிற்கு நுழைந்து நுழைவு வாயில் கண்ணாடியை உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Oct 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...