/* */

தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா பேச்சுப்போட்டியில் சேலம் கல்லூரி மாணவி

தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா பேச்சுப்போட்டியில் சேலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி பங்கேற்க உள்ளார்.

HIGHLIGHTS

தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா பேச்சுப்போட்டியில் சேலம் கல்லூரி மாணவி
X

பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள உள்ள சேலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஜனனி.

தேசிய இளைஞர் பாராளுமன்ற விழாவையொட்டி நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் கடந்த மாதம் 26 ஆம் தேதி மாநில அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் ஒரே இந்தியா ஒற்றுமையான இந்தியா என்ற தலைப்பில் சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜனனி பங்கேற்று முதல் பரிசை வென்றார்.

இதனையடுத்து தலைநகர் டெல்லியில் நடைபெறும் தேசிய இளைஞர் பாராளுமன்றத்தில் பாரதப் பிரதமர் முன்னிலையில் வரும் 8ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் பேச்சுப் போட்டியில் இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதல் பரிசு பெற்ற மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில், சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் பயின்று வரும் மாணவி ஜனனி தமிழகத்தின் சார்பில் பங்கேற்கிறார்.

தேசிய இளைஞர் பாராளுமன்றத்தில் உரையாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் குரலாய் பெண்களின் குரலாய் பாராளுமன்றத்தில் எனது உரை ஒலிக்கும் என மாணவி ஜனனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் மற்றும் ஆறுதல் பரிசாக இரண்டு பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

Updated On: 3 March 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!