/* */

சேலத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு

சேலத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சேலத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு
X

சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்க வந்த ஏலச்சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை, குகை, லீபஜார், புதிய பேருந்து நிலையம், கிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை, எலக்ட்ரானிஸ், பிளம்பிங், வெள்ளி உள்ளிட்ட கடைகளை வைத்து வியாபாரங்களை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் செவ்வாய்பேட்டையில் மளிகை கடை நடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வடநாட்டு நபர்களுக்காக கடந்த 10 ஆண்டுகளாக ஏல சீட்டு நடத்துவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களில் சிலர், இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

சுமார் ரூ.20 கோடி வரை பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட பிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 24 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...