/* */

சேலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தடையை மீறி பேரணி

சேலத்தில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சேலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தடையை மீறி பேரணி
X

சேலத்தில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் "மக்களாட்சியை பாதுகாப்போம்" என்கிற தலைப்பில் மேட்டுதெருவில் இருந்து ஒற்றுமை அணிவகுப்பு பேரணியாக சென்று கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறை அணிவகுப்பு பேரணி செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் தடையை மீறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திட்டமிட்டபடி மேட்டு தெருவில் இருந்து பேரணியை துவங்கினர். இதில் 300 க்கும் மேற்பட்டோர் நீல வண்ண சீருடை அணிந்து அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர். உடன் இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Updated On: 7 March 2022 1:25 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு