/* */

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் சஸ்பெண்ட்

சேலம் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் அலுவலக உதவியாளர் நீதிபதியை கத்தியால் குத்தியது தெரிய வந்தது

HIGHLIGHTS

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர்   சஸ்பெண்ட்
X

சேலத்தில் நீதிபதியை கத்தியால் குத்தியதால் பணிடை நீக்கம் செய்யப்பட்ட அலுவலக உதவியாளர்  பிரகாஷ் 

சேலம் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நான்காவது நீதிமன்ற நீதிபதியாக பொன்பாண்டி பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல நீதிமன்றத்திற்கு வந்த நீதிபதி பொன்பாண்டியிடம், அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் நேராகச் சென்று தன்னை பணி மாறுதல் செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டாராம்.

அப்போது நீதிபதிக்கும் அலுவலக உதவியாளருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீதிபதியை குத்த முயன்றுள்ளார். அப்போது நீதிபதி தடுத்தால் மார்பில் மட்டும் சிறிய கீறல் விழுந்தது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பிரகாஷை பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடனடியாக நீதிபதியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று சேர்த்தனர். அலுவலக உதவியாளர் பிரகாஷ் ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர், சமீபத்தில் சேலம் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.இதனால் ஆத்திரமடைந்த அலுவலக உதவியாளர், நீதிபதியிடம் விளக்கம் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் கத்தியால் குத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் பிரகாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 11 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பிரகாஷை பணியிடைநீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 2 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’