சேலத்தில் 926 விவசாயிகளுக்கு புதிய பயிர் கடனுக்கான காசோலை வழங்கல்

சேலத்தில் 926 விவசாயிகளுக்கு புதிய பயிர் கடனுக்கான காசோலை வழங்கல்
X

விவசாயிகளுக்கு காசோலை வழங்கிய அமைச்சர் கே.என். நேரு.

சேலத்தில் 926 விவசாயிகளுக்கு 6 கோடியே 30 லட்சம் மதிப்பிலான புதிய பயிர் கடனுக்கான காசோலையை அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்.

கூட்டுறவுத்துறை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 926 விவசாயிகளுக்கு 6 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய பயிர் கடனுக்கான காசோலையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று வழங்கினார்.

தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பயிர்கடன் பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி 49 ஆயிரம் பேருக்கு பயிர்கடன் தள்ளுபடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் கே.என் நேரு, இந்த முறைகேடு குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவில் தகுதி வாய்ந்த விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதோடு புதிதாக பயிர்கடனும் வழங்கப்படும் என்றார்.

Tags

Next Story
ai in future agriculture