/* */

சேலத்தில் விவசாயிகள் தாலிக்கயிற்றை ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்

சேலத்தில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தாலிக்கயிறு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சேலத்தில் விவசாயிகள் தாலிக்கயிற்றை ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், உத்திரபிரதேசம் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவத்தை கண்டித்தும் சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்த்தில் ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் அரங்க சங்கரையா, மற்றும் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உயிரிழந்த விவசாயிகளின் படத்திற்கு காய்கறிகளை மாலையாக அணிவித்தும் கையில் தாலிக்கயிறு ஏந்தியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

Updated On: 20 Oct 2021 8:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’