/* */

கணவன் மீது இருந்த அதீத பாசம்: சிலை வடித்து காதலர் தினத்தில் திறந்துவைத்த மனைவி

கணவன் மீது இருந்த அதீத பாசத்தால் அவருக்கு சிலை வடித்து காதலர் தினத்தில் மனைவி திறந்துவைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கணவன் மீது இருந்த அதீத பாசம்: சிலை வடித்து காதலர் தினத்தில் திறந்துவைத்த மனைவி
X

கணவரது சிலையை திறந்து வைத்த மனைவி கோமதி.

சேலம் ஏற்காடு பிரதான சாலை மத்திய சட்டக் கல்லூரி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் மூன்றாவது குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வங்கி ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்த சசிகுமார் சமூகப் பணிகளிலும், இறைபணியிலும், அதிகமாக ஈடுபாடு கொண்டவர்.

அன்னை இந்திரா குடியிருப்புவாசிகளை ஒன்றிணைத்து சங்கம் அமைத்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வைத்ததும், குடும்பத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வாழ்க்கையில் உயர்ந்தவராக சாதித்து காட்டியதும், இவரது கடும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக சொல்லப்படுகிறது. மேலும் குடும்பத்தில் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மனைவி மீது அளவற்ற பற்று கொண்ட கணவரும். கணவன் மீது அதித பாசம் கொண்டவராக மனைவியும் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கணவர் சசிகுமார் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்ததால் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கி உள்ளது.

கணவனின் இழப்பில் இருந்து மீள முடியாத அவரது மனைவி கோமதி, அவரது நினைவாக ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமென இருந்துள்ளார். இதற்காக அவரது வீட்டு வளாகத்தில் ஒரு மணிமண்டபம் போல் உருவாக்கி கணவரின் உருவத்தை மார்பளவு சிலையை செய்து வீட்டின் முன்பு வைத்து வழிபட முடிவு செய்தார்.

அதன்படி கணவரின் சிலையை வீட்டின் முன்பு வைத்து, இந்த காதலர் தினத்தில் அவர் சிலையை ஊர்மக்கள் முன்னிலையில் திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து கணவரின் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்து இறைவனுக்கு நிகராக வழிபடுகிறார். தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த இந்த காலத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறு பிரச்சனை கூட விவாகரத்தில் முடியும் இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டாக இருவரும் வாழ்ந்து காட்டி அதில் ஒருவர் பிரிந்து சென்றால் அந்த பிரிவையும் வாழ்நாள் முழுவதும் கண் முன்னே நிறுத்தும் வகையில் கணவருக்கு சிலை வடித்து மனைவி கடவுளாக வழிபடும் சம்பவம் கொல்லப்பட்டி பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அனைவரும் நேரில் வந்து சசிகுமாரின் இறைபணி மற்றும் சமூகப் பணியை பாராட்டி செல்வதோடு கணவனுக்கு சிலை வைத்த மனைவியை வெகுவாக பாராட்டி செல்கின்றனர்.

Updated On: 15 Feb 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!