/* */

சேலத்தில் நேரடி தேர்வை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சேலத்தில் கல்லூரி மாணவர்கள் நேரடி தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சேலத்தில் நேரடி தேர்வை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர்கள்  போராட்டம்
X

சேலத்தில் நேரடி தேர்வை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக எழுதி வந்த நிலையில், தற்பொழுது அண்ணா பல்கலைகழகம் ஆன்லைன் தேர்வை ரத்து செய்து நேரடி தேர்வை எழுத வேண்டும் என அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பாடம் நடத்திவிட்டு தற்போது நேரடி தேர்வு அறிவித்துள்ளது. மாணவர்கள் வாழ்வை கேள்விக்குறியாகும். எனவே நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் தேர்வை அமல்படுத்த வலியுறுத்தி சேலம் அனைத்து மாணவர்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Updated On: 15 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்