/* */

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம்

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம்
X

வாலிபர் உடல் கண்டெடுக்கப்பட்ட இடிந்த வீடு

சேலம் குகை ராமலிங்கசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மளிகை வியாபாரி ஆறுமுகம். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான சுமார் 250 சதுர அடி இடத்தில் சிதிலமடைந்து இருந்த பழைய சுவரை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

நேற்றைய தினம் பழைய சுவர்களில் ஒருபகுதியை இடித்துள்ளனர். மீதி பகுதியை இன்றுகாலை இடிக்க முயன்றபோது அந்த சுவர் ஏற்கனவே விழுந்து காணப்பட்டது. மேலும் அந்த சுவருக்கு அடியில் வாலிபர் சடலம் ஒன்றும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு தகவல் கொடுக்கப்படவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இடிபாடுகளுக்கிடையே இருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார்(20) என்பது தெரியவந்தது.

இதனை அறிந்த ராஜேஷ்குமார் உறவினர்கள் அப்பகுதியில் கூடி கதறி அழுதனர். ராஜேஷ்குமார் எதற்காக அந்த இடத்திற்கு வந்தார்?. அடித்து கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!