/* */

உலக எய்ட்ஸ் தினம் - சேலத்தில் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

உலக எய்ட்ஸ் தினம் - சேலத்தில் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி
X

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, சேலத்தில் நடைபெற்றது.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை, ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார். இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு, எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக வந்தனர்.

குறிப்பாக, எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி நோய் இல்லதா சமுகத்தை உருவாக்கிட வேண்டும், ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை அரவணைக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியபடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பெரியார் சிலை, வள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, வந்தடைந்தனர். முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், எய்ட்ஸ் நோய் இல்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தும் விதமாக உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

Updated On: 1 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்