/* */

சேலத்தில் நீண்ட நாட்களுக்கு பின் அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று திறப்பு

கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததை அடுத்து சேலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று திறக்கப்பட்டன.

HIGHLIGHTS

சேலத்தில் நீண்ட நாட்களுக்கு பின் அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று திறப்பு
X

 பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி கோவில் வழிபாடு செய்யும் பக்தர்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுப்பு; வணிக நிறுவனங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், சுகவனேஷ்வரர் கோவில், குழந்தை இயேசு பேராலயம், சிஎஸ்ஐ பேராலயம் மற்றும் ஜாமியா மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

Updated On: 15 Oct 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...