அதிமுகவினர் 2,000 பேர் மீது வழக்குபதிவு

அதிமுகவினர் 2,000 பேர் மீது வழக்குபதிவு
X
சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 2,000 பேர் மீது வழக்குபதிவு.

தமிழக முதல்வரை ஆ.ராசா அவதூறாக பேசியதாக கூறி, அதிமுகவினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் பகுதி செயலாளர் சரவணன் தலைமையில் 600 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு உருவபொம்மையை எரித்தனர். அயோத்தியாப்பட்டணத்தில் மெடிக்கல் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பகுதி செயலாளர் பாலு தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்தந்த கிராம நிர்வாக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்படி பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஆயிரம் பேர் மீதும், அஸ்தம்பட்டியில் 600 பேர் மீதும், அயோத்தியாப்பட்டணத்தில் 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், மறியலில் ஈடுபடுதல், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இதேபோல மாவட்டத்தில் இடைப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், மல்லியகரை உள்ளிட்ட 12 இடங்களில் அதிமுகவினர் மறியல் மற்றும் உருவபொம்மை எரிப்பில் ஈடுபட்டனர். இவர்களின் மீது அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
application of ai in agriculture