/* */

தமிழகத்தில் அரசுப் பணிக்கு தமிழ் கட்டாயம்: உயர் கல்வித் துறை அமைச்சர் பேச்சு

தமிழகத்தில் அரசுப் பணிக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் அரசுப் பணிக்கு தமிழ் கட்டாயம்: உயர் கல்வித் துறை அமைச்சர் பேச்சு
X

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறாமல் இருந்த 20 ஆவது பட்டமளிப்பு விழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு மாநிலம் வளர வேண்டுமானால் மொழி வளர வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் என்றால் தமிழில் தேர்வு எழுத வேண்டும் என்று ஆணை பிறப்பித்து உள்ளார். இது தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும். கடந்த கடந்த 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 17ல் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்பதற்காக அப்போதைய முதல்வர் கலைஞரிடம் கேட்டுக் பெற்று வந்த பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி ,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கலைஞர் ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது .கடந்த 10 ஆண்டுகளாக அது சரியாக செயல்படவில்லை. தற்போது தான் பல்கலைக்கழக துணைவேந்தர் முயற்சி மேற்கொண்டு அது செயல்பட தொடங்கியுள்ளது. இன்று முனைவர் பட்டம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.இது நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது.

பட்டம் பெறுபவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக உள்ளனர். இது பெரியார் கண்ட கனவு நிறைவேறி உள்ளதை காட்டுகிறது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை இருந்ததை தந்தை பெரியார் மாற்றியுள்ளார். பெண்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காக தான் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்போது அதிக அளவில் பெண்கள் பட்டம் பெற்றுள்ளனர்.

தமிழக முதல்வரும் பெண்கள் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். முன்பு பெண்கள் குறைந்தளவு படித்து வந்தனர் .ஆனால் தற்போது பெண்கள் அதிக அளவு படித்து பட்டம் பெறுகிறார்கள். தமிழகத்தில் அரசு பணியில் சேருபவர்களுக்கு நிச்சயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

இதுவரை தமிழை கற்காத இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் நிச்சயம் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இது தற்போது ஆண்களுக்கான சவாலாக மாறி இருக்கிறது. ஆண்களும் அதிக அளவு படித்து பட்டம் பெற வேண்டும். ஆசிரியர் பெருமக்களும் முழுமையான பயிற்சி பெற்று பாடம் நடத்த வேண்டும் என்றார்.

Updated On: 6 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    விதிகளை மீறி மண் எடுப்பதால் கிராம மக்கள் போராட்டம்..!
  2. சினிமா
    பாரா பாடல் வரிகள் - இந்தியன் 2 (2024)
  3. மாதவரம்
    கங்கையம்மன் ஆலய தீமிதி திருவிழா!
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துகள் அப்பா அம்மா..!
  5. நாமக்கல்
    வலையப்பட்டியில் என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கல்!
  6. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா..!
  7. சென்னை
    என்ன செய்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்?
  8. செங்கல்பட்டு
    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஒரு முக்கியமான தகவல்!
  9. ஈரோடு
    கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற...
  10. மேட்டுப்பாளையம்
    மண் சரிவால் நீலகிரி மலை இரயில் சேவை இரத்து: சீரமைக்கும் பணிகளில்...