சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு தண்டனை: சேலம் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு  தண்டனை: சேலம் நீதிமன்றம் தீர்ப்பு
X
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனையும், 40,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே சிக்கனம் பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ராமன் (21). இவர, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இதனையடுத்து, அந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரனை முடிந்த நிலையில், இன்று போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40,000 அபராதம் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பளித்தார்.

Tags

Next Story
பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்..!