/* */

சேலத்தில் சாலை வசதி கோரி பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

சாலை வசதி கோரி பள்ளி மாணவ, மாணவியருடன் கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சேலத்தில் சாலை வசதி கோரி பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
X

சாலை வசதி கோரி மாணவர்களுடன் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த காஞ்சேரி காட்டுவளவு கிராம மக்கள்.

சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை அருகே உள்ளது காஞ்சேரி காட்டுவளவு கிராமம். வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சென்று வர போதிய சாலை வசதி இல்லை என்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கும், அவசர மருத்துவ தேவைகளுக்கும் உடனடியாக செல்ல முடியாத நிலை உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் வனப்பகுதியையொட்டி நடந்து செல்லும்போது பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் ஆபத்து நேர்ந்திடும் அச்சத்தில் உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு மேல்நிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளி செல்லும் மாணவ மாணவியருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக கூறும் காஞ்சேரி காட்டுவளவு பகுதி மக்கள் ஏற்கனவே இருந்த சாலையை முறையாக செப்பனிட்டு முறையான சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On: 27 Sep 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்