/* */

ஓமலூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்

ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

ஓமலூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை:  ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்
X

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுப்பகுதிகளில், நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

மழையுடன் காற்று பலமாக வீசியதால் சக்கரை செட்டியப்பட்டி, தும்பிபாடி, தேக்கம்பட்டி மற்றும் டேனிஸ்பேட்டை ஆகிய பகுதிகளில், சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்தன. பல இடங்களில் வீடுகளில் சேதம் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

குலை தள்ளிய நிலையில், வாழை மரங்கள் சேதமடைந்ததால், அதனை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


Updated On: 23 April 2021 5:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு