சமையல் பணியாளருக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட சமையல் பணியாளர்கள்.
சேலம் மாவட்டத்தின் ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஆகிய இடங்களில் 50க்கும் மேற்பட்டோர் சமையலர் ஆக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக விடுதி மற்றும் உண்டு உறைவிடப் பள்ளியில் சமையல் வேலை செய்தவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாமல் ஆதிதிராவிட நலத் துறையினர் இருந்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த சமையலர் மற்றும் குழந்தை மற்றும் மனைவிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிற்படியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது.
காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நபர்கள் மட்டும் ஆதிதிராவிட நலத் துறை அலுவலகத்திற்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சமையல் பணியாளர் கூறும்போது, ஆதிதிராவிட நலத்துறை சார்பில் உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் விடுதிகளில் மாணவ மாணவிகளுக்குச் சமையல் செய்து உணவு வழங்கி வருகிறோம். கடந்த 2 ஆண்டு காலமாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால் எங்கள் குடும்பம் மிகவும் அவதியுற்று வருகிறோம்.
இதனால் பிழைக்க முடியாமல் தவித்து வருவதாகவும், இது குறித்து இதுவரை 28 முறை மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை எடுக்காததால் வேறு வழி தெரியாமல் மாவட்ட ஆட்சியர் வாயிற்படி முன்பு குடும்பத்துடன் வந்துவிட்டதாகவும் எங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu